பக்கத்து வீட்டாருடன் பஞ்சாயத்து: முடிவுக்கு வந்த நடிகை த்ரிஷா விவகாரம்!

By KU BUREAU

பக்கத்து வீட்டார் மதில் இடித்துக் சுவர் கட்டக் கூடாது என்று நடிகை த்ரிஷா தொடர்ந்த வழக்கில் சமரச முடிவு எட்டப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில் பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள தனது பக்கத்து வீட்டார் மெய்யப்பனுக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கக் கோரி நடிகை த்ரிஷா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், மதில் சுவரை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் த்ரிஷா மற்றும் மெய்யப்பனுக்கு இடையிலான பிரச்சினை சமரசமாக பேசி தீர்த்து வைக்கப்பட்டதாக இருதரப்பினரும் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE