எத்தனை வருஷங்களானாலும் விட மாட்டேன்: மகன்களை மீட்க போராடும் ஜெயம் ரவி!

By KU BUREAU

எத்தனை வருடங்களானாலும் என் மகன்களை விட்டுத்தர மாட்டேன் என்று தனது மனைவி ஆர்த்தியின் கஸ்டடியில் இருந்து மகன்களை மீட்க போராடிக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து செய்தி கடந்த சில மாதங்களாகவே திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாடகி கெனிஷாவுடன் நடிகர் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட நெருக்கம்தான் விவாகரத்துக்கு காரணம் என்று செய்தி பரவிய நிலையில், இதை மறுத்து பேசினார் ஜெயம் ரவி.

பாடகி கெனிஷா பற்றி தவறாக பேசவேண்டாம் என்றும் அவருடன் இணைந்து வருங்காலத்தில் ஹீலிங் செண்டர் ஒன்றைத் துவங்க இருப்பதாகவும் சமீபத்தில் நடைபெற்ற ‘பிரதர்’ படத்தின் விழாவில் பேசியிருந்தார்.

மகன்கள் குறித்து பேசிய போது, “ஆர்த்தியின் கட்டுப்பாட்டில் எனது இரண்டு மகன்களும் இருக்கின்றனர். அவர்களை வைத்து எதிர்காலத்தில் படம் தயாரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். அது என் கனவு. அவர்கள் தான் என் சந்தோஷம். விவாகரத்து பெற 10-20 ஆண்டுகள் ஆனாலும் நான் போராடத் தயார். கெனிஷாவுக்கும் என் விவாகரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனப் பேசியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE