விவாகரத்து சர்ச்சைக் குறித்து நடிகர் ஜெயம் ரவி விளக்கம்!

By KU BUREAU

விவாகரத்து குறித்து தனக்கு தெரியாது என்று ஆர்த்தி ரவி கூறியிருந்த நிலையில், விவாகரத்து பற்றி ஆர்த்தியிடம் முன்பே சொல்லியிருந்தேன் என்றும், இன்னொரு பெண்ணுடன் என்னைத் தொடர்புபடுத்தி பேசுவது தவறான விஷயம் என்றும் இன்று செய்தியாளர்களிடையே நடிகர் ஜெயம் ரவி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து செய்தி, பிரபல பாடகியுடன் தொடர்பு, கோவாவில் தனிமை என்று இணையத்தில் சர்சைகளைக் கிளப்பி வருகிறது. தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட பதிலுக்கு அவர் மனைவி, ’தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவி எடுத்த முடிவு இது. அவரிடம் என்னை பேசவே யாரும் அனுமதிக்கவில்லை’ என பதில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில், பிரபல பாடகி ஒருவருடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட நெருக்கம்தான் இவர்களது பிரிவுக்குக் காரணம் என செய்திகளும் கிளம்பியது.

ஜெயம் ரவி நடிப்பில் தீபாவளி ரிலீஸாக ‘பிரதர்’ படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயம் ரவி தனது விவாகரத்து பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

“கடந்த சில மாதங்களாகவே விவாகரத்து முடிவில் இருந்தேன். இது வேதனையான விஷயம் தான். இரண்டு முறை இது குறித்து ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அவரது அப்பா என்னிடம் பேசினார். இரு குடும்பத்தினரும் பேசினார்கள். இப்படி இருக்கும் போது விவாகரத்து பற்றி தெரியாது என ஆர்த்தி சொல்வது அதிர்ச்சியாக உள்ளது. என் மகன்களிடம் அவர்களுக்குப் புரியும்படி என் முடிவு பற்றி சொன்னேன். எல்லா குழந்தைகளும் போல நாங்கள் சேர்ந்து இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். என் மகிழ்ச்சி முக்கியம் எனக் கருதியால் இந்த முடிவை என் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்கள்.

இத்தனை வருட சினிமா வாழ்வில் எந்த கிசுகிசுவும் இல்லாமல் இருந்தவன் நான். என்னை இன்னொரு பெண்ணுடன் சேர்த்து வைத்து பேசுவது தவறு. அவர் பலருக்கும் உதவி செய்து வருகிறார். நானும் அவரும் இணைந்து ஆன்மீக மையம் ஒன்று அமைக்க இருந்தோம். நிச்சயம் உண்மை ஒருநாள் வெளியே வரும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE