நிஜ சம்பவப் பின்னணியில் சாரி

By KU BUREAU

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம் ‘சாரி’. சேலை அணிந்த பெண்ணின் மீது தீரா அன்பு வைத்திருக்கும் ஒருவன், அவளுக்குத் தொல்லை தருகிறான். ஒரு கட்டத்தில் அதுவே எப்படி ஆபத்தாக மாறுகிறது என்பதுதான் கதை. கதாநாயகனாக சத்யா யாது, நாயகியாக ஆராத்யா தேவி நடித்துள்ளனர். சபரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE