நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு!

By KU BUREAU

தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

'என்னை அறிந்தால்’, ‘நிமிர்’, 'GOAT' உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி நாயர். தனது வீட்டில் பணிபுரிந்த ஊழியரைத் தாக்கியதாக அவர் மீது தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு நடிகை பார்வதி நாயர் தன் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் என்பவர் தன்னிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றதாக கூறி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பதிலுக்கு சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தன் மேல் திருட்டு பட்டம் கட்டியதாகவும் புகார் கொடுத்திருந்தார். ஆனால், சுபாஷ் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இதனை அடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை பார்வதி நாயர், ராஜேஷ், இளங்கோவன் செந்தில், அஜித் பாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE