நடிகர் தனுஷின் 52ஆவது படம் இதுதான்... வெளியானது அறிவிப்பு!

By KU BUREAU

சென்னை: நடிகர் தனுஷின் 52ஆவது படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

’பா. பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் தனுஷ் இயக்குநராக மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார். தனது 52ஆவது படத்தை தனுஷ் இயக்குகிறார். இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர்களுக்கு சரியான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று நடிகர் தனுஷ் மீது எழுந்த புகார் தொடர்பான பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக சொல்லி தனுஷ் நடிகர் சங்கத்திற்கு நன்றி சொல்லி இருந்தார்.

அதேபோல, தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பதை முன்பு உறுதி செய்திருந்தார். நடிகர்கள் அசோக்செல்வன், ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் ஆகியோரும் தனுஷ் இயக்கி, நடிக்கும் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தெரிகிறது. விரைவில் இதுபற்றி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE