‘தமிழ் சினிமாவுக்கு ஹேமா கமிட்டி தேவையில்லை’ - சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

By KU BUREAU

தமிழ் சினிமாவுக்கு ஹேமா கமிட்டி போன்ற அமைப்பு அவசியமில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதுபற்றி கூறும்போது, “தமிழ் திரையுலகில், ஹேமா கமிட்டி குறிப்பிட்டது போன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளேன். அதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களை நான் சந்தித்ததில்லை.

இது எதுவும் நடக்கக் கூடாது என்றுதான் விரும்புகிறேன். தமிழ் திரையுலகுக்கு ஹேமா கமிட்டி போன்ற அமைப்பு இதுவரை தேவைப்படவில்லை. இங்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்தால் கடும் தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE