‘லெஜண்ட்’ சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத்

By KU BUREAU

‘லெஜண்ட்’ படத்தை அடுத்து சரவணன் நடிக்கும் படத்தை, துரை.செந்தில்குமார் இயக்குகிறார். துறைமுகத்தைச் சுற்றி நடக்கும் கதையை கொண்ட இதன் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது.

இந்தப் படம் பற்றி லெஜண்ட் சரவணன் கூறும்போது, “தூத்துக்குடியைத் தொடர்ந்து ஜெய்ப்பூர், ஜார்ஜியாவில் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான இதில் நாயகியாக பாயல் ராஜ்புத் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என்றார். இந்தப் படத்தில் ஷாம், ஆண்ட்ரியா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE