பீரியட் படமாக உருவாகும் ‘கார்த்தி 29’

By KU BUREAU

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ‘டாணாக்காரன்’ திரைப்படத்தை இயக்கிய தமிழ் இயக்குகிறார். ‘கார்த்தி 29’ என இந்தப் படம் இப்போதைக்கு அறியப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கார்த்தி அறியப்படுகிறார். இவரது நடிப்பில் உருவாகி உள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது அவர் ‘சர்தார் 2’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த சூழலில் அவர் நடிக்கும் ‘கார்த்தி 29’ பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி, காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான், ஜப்பான் உள்ளிட்ட படங்களை இந்த பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் இன்னும் பல சர்ப்ரைஸ் இருப்பதாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தப் படம் பீரியட் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இயக்குநர் தமிழ், டாணாக்காரன் மூலம் கவனம் ஈர்த்தவர். காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்கள் எதிர்கொள்ளும் சூழலை டாணாக்காரன் படம் பேசி இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE