கூலியில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? - நெகிழ்கிறார் உபேந்திரா

By KU BUREAU

ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இதில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சவுபின் சாஹிர், உபேந்திரா, நாகார்ஜுனா உட்பட பலர் நடிக்கின்றனர். தமிழ் , மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகரைத் தேர்வு செய்து இதில் நடிக்க வைத்துள்ளனர். பிரபல கன்னட நடிகர் உபேந்திரா, சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார்.

இதில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி உபேந்திரா கூறும்போது, “என் படத்தின் வேலை விஷயமாகச் சென்னையில் இருந்தபோது லோகேஷ் கனகராஜிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் ‘கூலி’ படத்தின் ஒன்லைனை என்னிடம் சொன்னார். பிறகு, ‘போதும் இதற்கு மேல் சொல்ல வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன். நான் ரஜினிகாந்தின் பெரிய ரசிகன். அவர் படத்தில் நடிப்பதை யார் வேண்டாம் என்பார்கள்? என்னைப் பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE