“என் மீதான பாலியல் புகாரை சட்டப்படி சந்திப்பேன்” - நிவின் பாலி

By KU BUREAU

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை அண்மையில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இதன் அடிப்படையில் மலையாள நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் துறை வழக்குப் பதிவு செய்து வருகிறது.

அந்த வகையில் நடிகர் நிவின் பாலி மீது எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் படவாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர்தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதை மறுத்துள்ள நிவின் பாலி, ‘‘என் மீதான புகார் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதைநிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல உறுதியாக இருக்கிறேன். இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE