நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்!

By KU BUREAU

’வேல்’, ‘தெய்வத்திருமகள்’ உள்ளிட்டப் பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்- நடிகர் மோகன் நடராஜன் காலமானார்.

’கோட்டை வாசல்’, ‘புதல்வன்’, ‘மகாநதி’ உள்ளிட்டப் படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் மோகன் நடராஜன் (71). எண்பதுகளில் மோகன், நதியா நடிப்பில் வெளியான பூக்களைப் பறிக்காதீர்கள் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வந்தார்.

நடிகர் விஜயின் ‘கண்ணுக்குள் நிலவு’, அஜித்தின் ‘ஆழ்வார்’, சூர்யாவின் ‘வேல்’, விக்ரமின் ‘தெய்வத்திருமகள்’ உள்ளிட்டப் பல படங்களைத் தயாரித்தவர். உடல்நலக் குறைவால் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இரவு 10.30 மணியளவில் காலமானார்.

இன்று மாலை 3 மணியளவில் திருவொற்றியூரில் இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சூர்யா, இயக்குநர்கள் பி.வாசு உட்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE