நடனப்பள்ளி தொடங்கினார் இனியா

By KU BUREAU

‘வாகை சூடவா’ படம் மூலம் புகழ் பெற்றவர் மலையாள நடிகை இனியா. தொடர்ந்து, மவுனகுரு, அம்மாவின் கைபேசி, நான் சிகப்பு மனிதன் என பல படங்களில் நடித்துள்ளார். நடன கலைஞரான இவர், துபாயில், 'ஆத்ரேயா ஆர்ட்ஸ் ஸ்டூடியோ' என்ற நடனப் பள்ளியை தொடங்கி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ நடனத்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீன கலையை கலந்து புதுவிதமாகக் கற்பிப்பதில் எங்கள் ஸ்டூடியோ சிறந்து விளங்குகிறது. சமகால நடனம், செமி கிளாசிக்கல், திரைப்பட நடனம், கதக், ஒடிசி, லத்தீன் நடனம், ஹிப்ஹாப் உட்பட பல கலை வடிவங்களை நேர்த்தியாக கற்றுக் கொடுப்பதோடு, மேடை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள் என பலவித நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் முழுவீச்சில் செயல்படுகிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE