மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அவமரியாதை: நடிகை நமீதா பகீர் குற்றச்சாட்டு!

By KU BUREAU

சாமி தரிசனம் செய்ய சென்ற தன்னிடம் இந்து மத சான்றிதழ் கேட்டதாக நடிகை நமீதா பகீர் குற்றச்சாட்டை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் முன் வைத்திருக்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற தன்னிடம் இந்து மத சான்றிதழ் வேண்டும் என கோவில் அதிகாரி முத்துராமன் என்பவர் கேட்டதாக நடிகை நமீதா சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருக்கிறார்.

இன்று தனது கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நடிகை நமீதா சாமி தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவரை தடுத்து நிறுத்திய கோவில் அதிகாரி முத்துராமன் என்பவர் நமீதா இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு கூறியதாகவும் தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், அவர் தன்னிடம் கேட்டது பிரச்சினை இல்லை. அவர் தன்னிடம் கேட்ட விதம்தான் பிரச்சினை என நடிகை நமீதா கூறியுள்ளார். இதுதொடர்பாக, இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE