பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி - நித்யாமேனன்!

By KU BUREAU

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார்.

’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் பாண்டிராஜின் முந்தியப் படங்களைப் போலவே, கதைக்கு முக்கியத்துவம் கொண்ட குடும்ப பார்வையாளர்களுக்கு ஏற்ற கதையாக இது இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார். இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும். ’மகாராஜா’ பட வெற்றிக்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி தற்போது ‘ட்ரெயின்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE