இயக்குநர் மாரிசெல்வராஜின் 'வாழை’ படத்தைப் பார்த்து கலங்கிய இயக்குநர் பாலா!

By KU BUREAU

இயக்குநர் மாரிசெல்வராஜின் ‘வாழை’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாலா கண்கலங்கியுள்ளார்.

இயக்குநர் மாரிசெல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் நாளை வெளியாகிறது. சிறுவயதில் தான் சந்தித்த துயர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் மாரிசெல்வராஜ். நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் உள்ளிட்டப் பலரும் இதில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் செலிபிரிட்டி ஷோவில் இயக்குநர் பாலா கலந்து கொண்டு படம் பார்த்திருக்கிறார். சிறுவயதில் மாரிசெல்வராஜ் பட்ட துயரங்களைப் பார்த்து பேச வார்த்தைகள் இல்லாமல் கலங்கி இருக்கிறார் பாலா.

கண்கள் கலங்கியபடி அமைதியாக மாரிசெல்வராஜ் அருகில் அமர்ந்திருந்த இயக்குநர் பாலா, பேச வார்த்தைகளற்று மாரிசெல்வராஜின் கையை பிடித்தபடி உணர்ச்சிபெருக்கில் அவரைக் கட்டித்தழுவி முத்தம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை நெகிழ்ச்சியாக மாரிசெல்வராஜ் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதுபோலவே, நடிகர் சூரியும் ‘வாழை’ படம் பார்த்துவிட்டு மாரிசெல்வராஜை கட்டியணைத்து முத்தம் கொடுத்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE