திறமையான நடிகை என யாரும் சொன்னது கிடையாது: நடிகை பார்வதி உருக்கம்!

By KU BUREAU

சினிமாவுக்கு நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் என்னை நல்ல நடிகை என்று யாரும் சொன்னது இல்லை என நடிகை பார்வதி பேசியிருக்கிறார்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘தங்கலான்’ படம் ரிலீஸாகி இருக்கும் நிலையில், பட புரோமோஷனுக்காக பல்வேறு யூடியூப் தளங்களுக்கு பேட்டியளித்து வருகிறார் நடிகை பார்வதி. அதில் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கைப் பற்றிய பல்வேறு விஷயங்களைப் பகிந்திருக்கிறார்.

“வருடத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மூன்று மாதங்கள் படங்கள் என்றால், மீதி நாட்களில் என் நண்பர்களுடன் உரையாடி கொண்டிருப்பேன், எனக்குப் பிடித்த விஷயங்களை செய்வேன். நான் நடிக்க வந்த முதல் ஏழு வருடங்களில் எந்தப் படமும் எனக்கு வெற்றியாக அமையவில்லை. என்னை யாரும் நல்ல நடிகை என்று சொன்னதில்லை. அதன் பின்னர் தான் நான் நடித்தப் படங்கள் வெற்றியடைய ஆரம்பித்தது. ஆனால், என் வேலையை நான் மதித்து ஒழுங்காக செய்கிறேன் என்ற திருப்தி எப்போதும் என் மனதில் உண்டு” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE