தேசிய விருதுகள்2022: மம்முட்டி, ரிஷப்ஷெட்டி - சிறந்த நடிகருக்கான விருது யாருக்கு?

By KU BUREAU

இன்று மதியம் எழுபதாவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதில் சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டி பெறுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உட்பட திரைப்படத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வரப்படுகிறது. கடந்த வருடம் ‘புஷ்பா’ படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் தேசிய விருது பெற்றிருந்தார். தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் நடிகர் என்கிற பெருமையையும் பெற்றிருந்தார்.

இந்த வருடம் நடைபெறும் 70வது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘ரோரார்சாச்’ ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் மம்முட்டியின் பெயர் தேர்வுக்குழுவினரின் பரிசீலனையில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுபோல, ‘காந்தாரா’ படத்தில் மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்த நடிகர் ரிஷப் ஷெட்டியின் பெயரும் பரிந்துரையில் உள்ளது. இவர்களோடு, ‘12த் ஃபெயில்’ படத்தில் நடித்த நடிகர் விக்ராந்த் மாஸே பெயரும் சிறந்த நடிகருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இதில் நடிகர் மம்முட்டியே வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இன்று மதியம் விருதுகள் பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE