ஆஸ்கர் விருதே கிடைக்கும் என்றாலும் இதை செய்ய மாட்டேன்: நடிகை ஜான்வி கபூர்!

By KU BUREAU

நடிகை ஜான்வி கபூர் தனக்கு ஆஸ்கர் விருதே கிடைக்கும் என்று சொன்னாலும் இந்த விஷயத்தை செய்ய மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் படங்கள் தவிர்த்து தென்னிந்திய படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ‘தேவரா’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ஜான்வியின் பாடல் ரசிகர்களை கவனம் ஈர்த்தது. தென்னிந்திய படங்களிலும் சீக்கிரம் எண்ட்ரி கொடுக்க நினைப்பவர் தனக்கேற்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வருவதாகக் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், ஜான்வி கபூர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஆஸ்கரே கிடைத்தாலும் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். “படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஆஸ்கர் விருதே கிடைக்கும் என்று சொன்னாலும் நான் மொட்டை அடித்துக் கொண்டு நடிக்க மாட்டேன்.

என்னுடைய அம்மா என் தலைமுடி நீளமாக வளர வேண்டும் என்று அக்கறை எடுத்துக் கொண்டார். வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எண்ணெய் மசாஜ் இருக்கும். அவர் எனது தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். முதல் படத்திற்காக நான் தலைமுடியை ஷார்ட்டாக கட் செய்த போதே அம்மா என் மீது கோபப்பட்டார். அதனால், இனி கதாபாத்திரத்திற்காக மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னால் நிச்சயம் அதை ஏற்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE