தூத்துக்குடி: ’தங்கலான்’ டிக்கெட் பணம் திரும்ப வேண்டும் - ரசிகர்கள் வாக்குவாதம்!

By KU BUREAU

நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் டிக்கெட் பணம் திரும்ப வேண்டும் என விவாதம் நடத்தியுள்ளனர்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி நடிப்பில் நேற்று ‘தங்கலான்’ படம் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், நேற்று தூத்துக்குடியில் உள்ள கிளியோபாட்ரா திரையரங்கில் படம் பார்த்தவர்கள் தங்களின் டிக்கெட் தொகையை திரும்ப கேட்டு பிரச்சினை செய்திருக்கிறார்கள். புதிதாக சீரமைக்கப்பட்ட அந்தத் திரையரங்கில் படத்தின் ஆடியோ சரியில்லை என்று முறையிட்டிருக்கிறார்கள்.

ஆனால், அதை சரி செய்யாமலேயே திரையரங்க உரிமையாளர்கள் படத்தைத் தொடர்ந்து திரையிட்டுள்ளனர். இதனால், கோபமடைந்த ரசிகர்கள் படம் பார்ப்பதற்காக தாங்கள் கொடுத்தப் பணத்தைத் திரும்ப கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்பாகவே முன்பதிவு செய்து விட்டு ஆர்வத்துடன் காத்திருந்த எங்களுக்கு இப்படியான ஏமாற்றம் கிடைத்தது என்று தொடர்ந்து அவர்கள் திரையரங்க உரிமையாளர்களுடன் வாக்குவாதம் செய்த நிலையில், வேறு வழியில்லாமல் அவர்களுக்கு பணத்தைத் திரும்ப கொடுத்து அனுப்பியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE