பெண் சுதந்திரம் குறித்த காந்தியின் கருத்தை பகிர்ந்த இயக்குநர் அட்லீ

By KU BUREAU

சென்னை: பெண் சுதந்திரம் குறித்து காந்தி சொன்ன கருத்தை தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் அட்லீ. நாடு முழுவதும் இன்று 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

“ஒரு பெண் நள்ளிரவில் வீதி வழியே சென்று பாதுகாப்பாக வீடு திரும்புகிற அந்த நாள்தான் நம் தேசத்தில் மெய்யான சுதந்திரம் கிடைத்ததாக ஏற்றுக்கொள்ளப்படும்” என மகாத்மா காந்தி சொல்லியுள்ளார். அவரது அந்த கருத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குநர் அட்லீ.

கடந்த வாரம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளார். தனது சுதந்திர தின உரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE