தங்கலான், கங்குவா படங்கள் வெளியாவதில் சிக்கல்!

By KU BUREAU

நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ மற்றும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ மற்றும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படங்கள் வெளியீட்டை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த இரண்டு படங்களையும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ‘தங்கலான்’ படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாவதில் தற்போது சிக்கல் எழுந்திருக்கிறது.

அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடன் வாங்கி இருக்கிறார். இந்த கடனைத் திருப்பி செலுத்தாததால் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘தங்கலான்’ மற்றும் ‘கங்குவா’ படங்களை வெளியிடும் முன்பு ரூ. 1 கோடி டெபாசிட் செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. பணம் டெபாசிட் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் திரைத்துறையினரிடையே பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE