விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அபிஷேக் பச்சன்: மோதிரத்தைக் காட்டி நெகிழ்ச்சி!

By KU BUREAU

நீண்ட நாட்களாக ஊடங்களில் வெளியாகி வந்த விவாகரத்து சர்ச்சைக்கு அபிஷேக் பச்சன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய் இருவருக்கு இடையிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. விரைவில் அவர்கள் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி ஊடகங்களில் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி கொண்டிருந்தது. இந்த செய்தியை இருவருமே மறுக்காமல் மெளனம் காத்து வந்தது மேலும் சர்ச்சையை பலமாக்கியது.

இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற பள்ளி படிக்கும் மகளும் இருக்கிறார். 17 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இருந்த திருமண வாழ்க்கை விரைவில் விகாரத்தாகப் போகிறதா என ரசிகர்களும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வந்தனர்.

பொதுநிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா- அபிஷேக் இருவரும் சில நேரங்களில் சேர்ந்து வந்தாலும், நீண்ட வருடங்களாக அணிந்து வந்த திருமண மோதிரத்தை கையில் இருந்து அபிஷேக் கழற்றியதே இந்த விவாகரத்து சர்ச்சை இன்னும் சூடுபிடிக்கக் காரணமாக அமைந்தது.

தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் அபிஷேக் பச்சன். சமீபத்தில் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை காண நேரில் சென்றிருக்கிறார் அபிஷேக். அப்போது, தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை ஊடகங்களிடம் காட்டி, ”நான் இன்னும் திருமணம் ஆனவன் தான். நாங்கள் தம்பதிகளாகதான் இருக்கிறோம். இதுபற்றி மேலும் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சொன்னால், அது வேறு மாதிரி போய்விடும். பிரபலமாக இருப்பதால், இதை எல்லாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்” என்று சொல்லி இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE