இனி கவர்ச்சிக்கு நோ: நடிகை நமீதா அறிவிப்பு!

By KU BUREAU

இனிமேல், சினிமாவில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என நடிகை நமீதா கூறியிருக்கிறார்.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் நகைக்கடை ஒன்றைத் திறந்து வைப்பதற்காக திரைப்பட நடிகை நமிதா வருகை தந்திருந்தார். அவருக்கு செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பத்திரிகையாளிடம் பேசிய அவர், “இரட்டை குழந்தைகள் பிறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. மீண்டும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். அடுத்து ஒரு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இன்னொரு படத்தில் ஆரம்ப காலத்தில் நடித்தது போல் கிளாமராக கவர்ச்சியாக நடிக்க கூறினார்கள். அதை நான் மறுத்து விட்டேன் தொடர்ந்து சின்னத்திரை மற்றும் வெப் சீரிஸ்களில் என்னைப் பார்ப்பீர்கள்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக என் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக என்னை ஒப்படைத்து விட்டேன். தொடர்ந்து மீண்டும் நடிக்க உள்ளேன். 100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்க மாட்டேன். நான் ஒரு தாயாக இருப்பதை மிக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் ஏற்றுக் கொள்கிறேன். நான் கர்ப்பமாக இருக்கும் பொழுது கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி கடவுள் பெயர்தான் வைப்பேன் என சொல்லியிருந்தேன். அதனால், ’கிருஷ்ணா, கியான்’ என வைத்துள்ளேன். இரண்டுமே கிருஷ்ணரின் பெயர்கள்தான்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE