திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகை!

By KU BUREAU

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் ‘மகாநதி’ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் திடீரென தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

அந்த பதிவில், ‘டெங்குவால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன். இதனால், ‘மகாநதி’ சீரியலில் என்னால் கலந்து கொள்வது கடினம். எனக்குப் பதிலாக திடீரென வேறு ஒருவரை கண்டுபிடிப்பது சீரியல் குழுவுக்கு கடினம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், வேறு வழியில்லை. இந்த கதாபாத்திரத்தில் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். உங்கள் எல்லோருடைய ஆதரவுக்கும் நன்றி! சீக்கிரம் சந்திப்போம்’ எனக் கூறியிருக்கிறார் திவ்யா. அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE