திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை சமந்தா!

By KU BUREAU

நடிகை சமந்தா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா மையோசிடிஸ் பிரச்சினைக் காரணமாக கடந்த ஒரு வருடமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். அதேநேரத்தில் தான் முன்பு ஒப்புக்கொண்ட படங்கள், வெப்சீரிஸ் ஆகியவற்றை முடித்துக் கொடுப்பதிலும் மும்முரமாக இருந்தார். அதில் ஒன்றுதான் ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ்.

ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த சீரிஸின் யுனிவர்ஸில் சமந்தாவும் இடம்பெறுகிறார். இதன் இந்திய பதிப்பில் சமந்தாவும் நடிகர் வருண் தவானும் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் மும்பையில் நடந்த இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சமந்தா, அதிகளவிலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றிருப்பது தனக்கு சவாலானதாக இருந்தாலும் அதை ரொமான்ஸ் செய்வது போல சந்தோஷமாக செய்திருப்பதாக சிரித்துக் கொண்டே சொன்னார்.

இந்த வெப்சீரிஸில் நடிப்பதற்காக தனது சம்பளத்தைப் பல மடங்கு உயர்த்தி இருக்கிறார் சமந்தா. ஒரு படத்தில் நடிப்பதற்கே சுமார் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கும் சமந்தா ‘சிட்டாடல்’ வெப்சீரிஸில் நடிப்பதற்கு மட்டும் ரூ. 10 கோடி வரை சம்பளம் பெற்றிருக்கிறாராம். இதற்கு முன்பு அவர் ஒரு பாடலுக்கு நடனமாடிய ‘புஷ்பா’ படத்தின் ‘ஊ அண்டாவா...’ பாடலுக்கு மட்டும் ரூ. 5 கோடி சம்பளமாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE