“அது நான் இல்லை” நடிகர் விஜய் ஆண்டனி சர்ச்சைப் பதிவு!

By KU BUREAU

நடிகர் விஜய் ஆண்டனி ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் பற்றி விளக்கம் ஒன்று கொடுத்துள்ளார்.

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த வாரம் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே இது விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ படத்தின் அடுத்த பாகம் என சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ‘மழை பிடிக்காத மனிதன்’ தொடக்கத்திலேயே இரண்டு நிமிட காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் காட்சிகளுக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும், கதையின் ஸ்பாய்லராக அமைந்திருக்கும் இந்தக் காட்சிகள் தன்னைக் கேட்காமலேயே இணைக்கப்பட்டிருப்பதாகவும் அதை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை என்றும் இயக்குநர் விஜய் மில்டன் பதறிப் போய் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பின்பு, இந்த காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிட காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக என் நண்பர், படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம்2 இல்லை’ எனக் கூறியிருக்கிறார்.

படத்தின் இயக்குநர் விஜய் மில்டன், ஹீரோ விஜய் ஆண்டனி என இருவருக்குமே தெரியாமல் இந்த காட்சிகளை யார் இணைத்தது என்கிற சர்ச்சைத் தொடர்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE