கேரளா நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா!

By KU BUREAU

கேரளா: வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு நடிகை ஜோதிகா நடிகர்கள் கார்த்தி, சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கொடுத்து உதவியுள்ளனர்.

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வயநாடு நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. வயநாடு துயர் துடைக்க நாடு முழுவதும் இருந்து உதவிக்கரங்கள் நீண்டு வருகிறது.

இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக, திரை கலைஞர்கள் ஜோதிகா, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும், நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE