நடிகர் ஷாருக்கானுக்குக் கிடைத்த பெருமிதம்!

By KU BUREAU

மும்பை: நடிகர் ஷாருக்கானின் உருவம் பொறித்த நாணயத்தை பாரிஸில் இருக்கும் மியூஸியம் ஒன்று வெளியிட்டுள்ளது.

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். இவருக்கு பாரிஸில் இருக்கும் க்ரெவின் மியூஸியம், ஷாருக்கானின் உருவம் பதித்த சிறப்பு நாணயம் ஒன்றை வெளியிட்டு பெருமைப்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இருந்து முதல்முறையாக இந்த பெருமையை பெறும் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானின் இந்தப் பெருமைக்காகப் பலரும் தங்கள் வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்.

கடந்த வருடம் ‘பதான்’, ‘டங்கி’, ‘ஜவான்’ என மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தார் ஷாருக்கான். மூன்று படங்களில் இரண்டு படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தது. சமீபத்தில் நடந்து முடிந்த தொழிலதிபர் அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்ட இவர், மணமக்களுக்கு ரூ. 40 கோடி மதிப்புள்ள பரிசு கொடுத்து அசத்தி இருக்கிறார் என்பதும் பேசுபொருளாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE