‘இந்தியன்2’ படத்துக்கு எதிர்மறை விமர்சனம்: பார்வையாளர்களை விமர்சித்த பாபி சிம்ஹா!

By KU BUREAU

சென்னை: ’இந்தியன்2’ படத்திற்கு எழுந்துள்ள எதிர்மறை விமர்சனங்களால் அந்தப் படத்தில் நடித்த நடிகர் பாபி சிம்ஹா கடுப்பாகியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விவேக், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த வாரம் ‘இந்தியன்2’ திரைப்படம் வெளியானது. சுமாரான திரைக்கதையால் இந்தப் படம் தோல்வி அடைந்தது. பார்வையாளர்களும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்தப் படத்தில் நெடுமுடி வேணுவின் மகனாக, போலீஸ் அதிகாரியாக பாபி சிம்ஹா நடித்திருப்பார். இந்த சூழலில் இப்படத்திற்கு எழுந்துள்ள எதிர்மறை விமர்சனங்கள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், “எல்லோரும் தங்களை அறிவாளிகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயம் நாம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என எண்ணிக் கொண்டு சும்மா நொட்டுக்கு சாக்கு சொல்லும் வகையில் எதோ ஒன்று பேசி வருகிறார்கள். அந்த அறிவாளிகளைப் பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE