பெற்றோருடன் சண்டை: நீண்ட வருடம் கழித்து இணைந்த சின்னத்திரை நடிகை ஆல்யா!

By KU BUREAU

சென்னை: நடிகை ஆல்யா மானசா நீண்ட வருடம் கழித்து தனது பெற்றோருடன் சேர்ந்திருக்கிறார்.

சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா. இவருடன் நடித்த சஞ்சீவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஆல்யாவின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால் பெற்றோரை எதிர்த்துதான் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார்.

இதனால், இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் ஆல்யாவின் பெற்றோர் அவருடன் பேசாமல் இருந்தனர். இந்த நிலையில், ஆல்யா- சஞ்சீவ் ஜோடி பிரம்மாண்டமான புதுவீடு ஒன்றை சென்னையில் கட்டி வருகின்றனர். இந்த வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்காக சஞ்சீவ் ஆல்யாவின் பெற்றோரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

மேலும், அவர்களின் கோபம் தணிந்தது என்று தெரிந்த உடன் ஆல்யாவை சந்திக்க வைத்து சந்தோஷப்படுத்தியிருக்கிறார் சஞ்சீவ். இதனை தொடர்ந்து ஆல்யா- சஞ்சீவ் இருவரும் சேர்ந்தே ஆல்யாவின் பெற்றோரை தங்கள் புதுவீட்டின் கிரஹப் பிரவேசத்திற்கு அழைத்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE