ஜோதிகாவின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற சூர்யா!

By ஆதிரா

நடிகை ஜோதிகா தற்போது நடிகர் மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்து வரக்கூடிய மலையாள படப்பிடிப்புத் தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார்.

சமீபத்தில் நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிகர் மம்முக்குட்டியுடன் இணைந்து நடிக்கும் 'காதல்- தி கோர்' படம் குறித்தான அறிவிப்பு வெளியானது. அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தப் படத்தை இயக்குநர் ஜோ பேபி இயக்குகிறார். தற்போது எர்ணாகுளம் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதன் படப்பிடிப்புத் தளத்திற்குத்தான் நடிகர் சூர்யா வந்திருக்கிறார். படக் குழுவினர், நடிகர் மம்மூட்டி, ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா மேஜையில் அமர்ந்து உணவு உண்ணும்படியான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா இதன் படப்பிடிப்பில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் இயக்குநர் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். ஃபேமிலி ட்ராமாவாக உருவாகி வரும் இந்த படத்தில் லாலு அலெக்ஸ், சின்னு சந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கத்து.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE