நடிகை ராஷ்மிகாவை செல்ஃபிக்காக சூழ்ந்த ரசிகர்கள்: திடீரென கையைப் பிடித்ததால் பரபரப்பு!

By KU BUREAU

நடிகை ராஷ்மிகா மந்தனாவை மும்பை விமானநிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முற்பட்ட போது, ரசிகர் ஒருவர் திடீரென கையைப் பிடித்ததால் அவருக்கு சங்கடம் நேர்ந்துள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் பேசுபொருளானது. தற்போது தனுஷூடன் அவர் நடித்து வரும் ‘குபேரா’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தியில் அதிக கவனம் செலுத்துவதால் மும்பையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை சொந்தமாக வாங்கி, அதில் வசித்து வருகிறார் ராஷ்மிகா. இந்த நிலையில், நேற்று மும்பை வந்த ராஷ்மிகாவை விமானநிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவருடன் செல்ஃபி எடுக்க முட்டி மோதினர். திடீரென ஆர்வக்கோளாறில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவின் கையைப் பிடித்து இழுத்து சங்கடப்படுத்தியுள்ளார். ஆனால், இதற்கெல்லாம் கோபப்படாமல், பொறுமையாக ராஷ்மிகா அவர்களிடம் நடந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE