3,400 மணி நேர வேலைப்பாடு : நடிகை தீபிகா படுகோனேவின் அசரடிக்கும் சேலை!

By KU BUREAU

நடிகை தீபிகா படுகோனேவின் சேலை விலை ரூ.2 லட்சம் என்றும் இந்த சேலையை உருவாக்கவும், வேலைப்பாடுகளுக்கு மட்டுமே சுமார் 3,400 மணி நேரம் எடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தொழிலதிபர் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்ட்டின் திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில், திருமணக் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

இவர்களின் சங்கீத் நிகழ்விற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் வந்திருந்தனர். அதில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதியும் கலந்துக் கொள்ளத் தவறவில்லை. இந்த சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை தீபிகா படுகோனே நீல நிற எம்பிராய்டரி புடவையில் வந்திருந்தார்.

தனது ‘பேபி பம்ப்’ தெரியும்படி அவர் எடுத்திருந்த ஃபோட்டோஷூட் புகைப்படங்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். தற்போது தீபிகா படுகோனே அணிந்திருந்த புடவையைப் பற்றிய அசரடிக்கும் விவரங்கள் தான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புடவை தோராணி என்ற பிராண்ட் ஆகும். இந்த சேலை துணி ஆர்கன்சா மற்றும் ஜென்னி சில்க்கில் உருவாக்கப்பட்டது. கைகள் மூலம் செய்யப்பட்ட எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுக்கு மட்டுமே சுமார் 3,400 மணி நேரம் ஆனது. இது முத்து, ஜரி மற்றும் சரம் போன்ற அலங்காரங்களைக் கொண்டுள்ளது. பிளவுஸ் ராஜபுதானா சானியா சோலியில் உருவாக்கப்பட்டது. இதன் விலை ரூ.46,500 மற்றும் 'ஹுக்கும் கி ராணி சேலை செட்' விலை ரூபாய் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE