சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியீடு எப்போது?

By காமதேனு

நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படமான ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாகப் பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இத்திரைப்படத்தின் வெளியீட்டு நாளைப் படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். அதன்படி, ‘எதற்கும் துணிந்தவன்’ அடுத்த ஆண்டு பிப்.4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE