நயன்தாரா இடத்தைப் பிடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்

By காமதேனு

‘தெனாலிராமன்’, ‘எலி’ திரைப்படங்களை வடிவேலுவை வைத்து இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

யுவராஜ் சொன்ன கதை சுவாரசியமாக இருந்ததால் உடனே இத்திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டார் என்றாலும், தற்போது பாலிவுட்டில் அவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக யுவராஜ் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த தேதிகளையும் ஷாருக்கான் படத்திற்குக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், யுவராஜ் தயாளன் இத்திரைப்படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும் அவருக்குப் பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’, ‘விக்ரம் வேதா’ போன்ற திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது யுவராஜ் தயாளன் இயக்கவுள்ள இத்திரைப்படம் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE