கோவா திரைப்பட விழாவில் சமந்தாவுக்குப் புதிய அங்கீகாரம்!

By காமதேனு

ஒரு மாதத்துக்கு முன்பு, தனது கணவர் நாகசைதன்யா்வோடு ஏற்பட்ட திருமண முறிவுக்குப் பிறகு பயணம், உடற்பயிற்சி என்று நேரத்தைச் செலவிட்டுவருகிறார் சமந்தா. அடுத்தடுத்து பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.

இந்நிலையில், இந்த மாதம் 20-28 ஆகிய தேதிகளில், கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராக சமந்தாவும் அழைக்கப்பட்டுள்ளார். பாரம்பரியமிக்க கோவா சர்வதேச திரைப்பட விழாவில், தென்னிந்தியாவிலிருந்து சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்ளும் முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சமந்தா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE