புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்திய சூர்யா

By காமதேனு

கடந்த வாரம், கர்நாடகாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தது இந்தியத் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் இறந்த பின்பு, அவருடைய உடல் பொதுமக்கள் பார்வைக்காக பெங்களூரு கண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டு, பின்பு அவருடைய தந்தை ராஜ்குமாரின் கல்லறை அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, விஜய் சேதுபதி புனித் ராஜ்குமாரை நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது நடிகர் சூர்யா புனித் ராஜ்குமாரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE