விஜய் சேதுபதியைத் தாக்கிய மர்ம நபர்

By காமதேனு

படப்பிடிப்புக்காக பெங்களூரூ விமான நிலையம் வந்திறங்கிய நடிகர் விஜய் சேதுபதி மீது மர்ம நபர் திடீர் தாக்குதல் நடத்தினார்.

படப்பிடிப்பில் பங்றே்பதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று நடிகர் விஜய் சேதுபதி வந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் விஜய் சேதுபதி மீது திடீர் பாய்ந்து தாக்கினார் .இதில் விஜய் சேதுபதி நிலை தடுமாறினார். உடன் பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவரை மீட்டனர். இதன் வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் நடிகர் என்பதால் அவர் தாக்கப்பட்டாரா..? அல்லது வேறு ஏதாவது ஒரு காரணமா என்பது இன்னும் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தபோது, எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறினார். தாக்கிய மர்ம நபரை விமான நிலையத் தொழில் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருவதால், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE