தந்தையின் சமாதி அருகே புனித் ராஜ்குமார் உடல் நாளை தகனம்

By காமதேனு

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல், நாளை(அக்.30) முழு அரசு மரியாதையுடன் அவரது தந்தை ராஜ்குமார் சமாதி அருகே தகனம் செய்யப்படவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

46 வயதான புனித் ராஜ்குமார், நேற்று காலை பெங்களூருவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார்.

அவரது மரணம் இந்தியத் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

புனித் ராஜ்குமாரின் மூத்த மகள் வந்திதா ராஜ்குமார் அமெரிக்காவிலிருந்து இன்று மதியம்தான் டெல்லி வந்தடைந்தார். அங்கிருந்து பெங்களூரு வர இரவு ஆகிவிடும் என்பதால், நாளை(அக். 31) ஞாயிறு அன்று இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. அதன்பின் புனித்தின் தந்தை பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் சாமாதி அருகே, புனித்தின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE