‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குநரின் இயக்கத்தில் பிரபாஸின் 25-வது படம்

By காமதேனு டீம்

‘பாகுபலி’ திரைப்படத்துக்குப் பிறகு இந்திய அளவில் புகழ்பெற்ற பிரபாஸ், தற்போது ‘ராதே ஷ்யாம்’ என்ற பான்-இந்தியா திரைப்படத்தில் நடித்துவருகிறார். 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது ‘சலார்’, ‘ஆதிபுருஷ்' என்ற 2 பிரம்மாண்டமான பான்-இந்தியா படங்களில் நடித்துவருகிறார் பிரபாஸ். இதைத் தொடர்ந்து, ‘மகாநடி’ படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ். இது அவருக்கு 24-வது திரைப்படமாக இருக்கும்.

பிரபாஸ் நடிக்கவுள்ள 25-வது திரைப்படத்தின் அறிவிப்பு அக்டோபர் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, பிரபாஸின் 25-வது படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை, ஹிந்தியில் ‘கபீர் சிங்’ என்ற பெயரில் ரீமேக் செய்து அதிலும் வெற்றிகண்டவர் சந்தீப். தற்போது ’அனிமல்’ என்ற ரன்பீர் கபூர் நடிக்கும் ஹிந்தித் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் சந்தீப் மற்றும் பிரபாஸ் இருவருக்கும் நல்ல வரவேற்பு இருப்பதால், இத்திரைப்படத்தைப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனராம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE