விரைவில் வெப் சீரிஸுக்கு வருகிறேன்!- நிதானமாகப் பேசும் நிக்கி கல்ரானி

By காமதேனு

மகராசன் மோகன்
readers@kamadenu.in

கார்த்தியின் ‘தேவ்’, ஜீவா நடித்த ‘கீ’ ஆகிய படங்களுக்குப் பின்னர், தமிழ் ரசிகர்களின் கண்ணில் படாமல் இருந்த நடிகை நிக்கி கல்ரானி, சசிகுமாருடன் இணைந்து நடித்துள்ள ‘ராஜவம்சம்’ படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார்.
ராம்பாலா இயக்கத்தில் சிவாவுடன் நடிக்கும் ‘இடியட்’ திரைப்படத்தின் படப்பிடிப்புடன் புத்தாண்டைப் புத்துணர்ச்சியுடன் தொடங்குகிறார் நிக்கி. சென்னை விமான நிலையத்திலிருந்து படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்லும் வழியில் ‘காமதேனு’ மின்னிதழுக்காக அவர் கொடுத்த பேட்டி:

‘ராஜவம்சம்’ படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?

 ஒரு கூட்டுக் குடும்பத்துல என்னவெல்லாம் நடக்கும்னு பேசுற படம் ‘ராஜவம்சம்’. கூட்டுக் குடும்பம் தர்ற அனுபவம் என்னோட நிஜ வாழ்க்கையில இருந்ததே இல்லை. ஏன்னா, எங்க குடும்பத்துல மொத்தமே நாங்க நாலு பேர்தான். அதனால இந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. படத்தோட பெரும்பாலான காட்சிகளைப் பொள்ளாச்சியிலதான் படமாக்கினாங்க. ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கும் என்னால மறக்க முடியாத அனுபவமா இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE