பிகில் படத்துக்காக வெயிட்டிங் - சந்தோஷம் பகிரும் சரண்யா மோகன் தம்பதி

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

கேரளத்தின் கோவளம் கடற்கரையை ஒட்டியிருக்கிறது அந்தப் பல் மருத்துவமனை. உள்ளே நோயாளிகளுக்குச்  கிச்சையளித்துக் கொண்டிருக்கிறார் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன். மருத்துவமனை வளாகத்தில் நமக்காக காத்திருந்த திருமதி அரவிந்த் கிருஷ்ணன் உற்சாகமாக நம்மை வரவேற்கிறார். இவர் வேறு யாருமல்ல… நடிகை சரண்யா மோகன்தான்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘யாரடி நீ மோகினி’, ‘வேலாயுதம்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த சரண்யா, இப்போது கையில் ஒரு குழந்தை, இடுப்பில் ஒரு குழந்தை என சந்தோஷமான குடும்பத் தலைவியாகியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் நடனப் பள்ளி நடத்துகிறார்.

சிகிச்சைக்குச் சின்ன இடைவெளி விட்டுவிட்டு நம்மோடு சேர்ந்துகொண்ட அரவிந்த் கிருஷ்ணனுக்கு, தனது மனைவியைப் பற்றி சொல்லும்போதே முகத்தில் ஏகப் பூரிப்பு. “சரண்யாவுக்கு ஆலப்புழா பூர்விகம். இவங்க குடும்பமே கலைக்குடும்பம்தான். இவங்க அப்பா மோகன் ‘யுவ கலாபவன்’னு டான்ஸ் ஸ்கூல் வச்சிருக்காங்க. சரண்யா இப்போ அண்ணாமலை யுனிவர்சிட்டியில பரதமும் படிச்சிருக்காங்க” என நிறுத்த, தொடர்கிறார் சரண்யா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE