ஆளவருகிறான் அசுரன்- எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வெற்றிமாறன்

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றான வெற்றிமாறன் - தனுஷ் ஜோடி, ‘அசுரன்’ படத்தின் மூலம் அக்டோபர் முதல் வாரத்தில் ரசிகர்களைச் சந்திக்க வருகிறது.

நாவல்களைத் திரை வடிவமாக்கத் தயங்கும் தமிழ்த் திரையுலகில் சற்றே வித்தியாசமானவரான வெற்றிமாறன், பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி இப்படத்தை எடுத்திருக்கிறார். சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலைத் தழுவி அவர் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம் விருதுகளைக் குவித்த நிலையில், ‘அசுர’னும் அத்த கைய எதிர்பார்ப்புகளைக் விதைத்திருக்கிறது.

இதுவரை வெற்றிமாறன் இயக்கிய ஐந்து படங்களில் நான்கில் தனுஷ்தான் நாயகன். ‘விசாரணை'யில் தனுஷ் நடிக்கவில்லை என்றாலும், தயாரிப்பாளர் அவர்தான். இந்தக் கூட்டணியின் கடைசி சிக்ஸரான ‘வட சென்னை’, ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், ‘அசுரன்’ வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள் இருவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE