சந்தானம் - யோகி பாபு கூட்டணி செம ரகளை பண்ணியிருக்கு!:  ‘டகால்டி'இயக்குநர் விஜய் ஆனந்த்

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in

படங்களின் ஃபர்ஸ்ட் லுக்கே ஹிட் அடிக்கும் காலம் இது. அந்த வரிசையில் சந்தானம் நடிக்கும் ‘டகால்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அதேசமயம், சிகரெட்டும் கையுமாக சந்தானம் ஸ்டைல் காட்டும் ஃபர்ஸ்ட் லுக்குக்குப் பலத்த கண்டனமும் எழுந்தது. ‘தெரியாமல் அப்லோட் ஆகிவிட்டது' என்று ட்விட்டரில் சந்தானம் சமாதானம் சொல்ல, உடனடியாக செகண்ட் லுக்கையும் படக் குழு வெளியிட்டது. ஆரம்பத்திலேயே அமளியைக் கிளப்பியிருக்கும் ‘டகால்டி' படத்தின் இயக்குநர் விஜய் ஆனந்தை அவரின் அலுவலகத்தில் சந்தித்தேன். பளீர் புன்னகையில் தாடியைத் தடவியபடி சன்னமான குரலில் பேச ஆரம்பிக்கிறார்.

நீங்கள் இயக்குநரான கதையைச் சொல்லுங்க...

பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். புட்டபர்த்தியில எகனாமிக்ஸ் படிச்சிட்டு வேலை பார்த்துட்டு இருந்தேன். சின்ன வயசுலேருந்து சினிமா ஆர்வம் இருந்துச்சு. திடீர்னு வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்துட்டேன். பல முயற்சிகளுக்கு அப்புறம் ஷங்கர் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். அவர்கிட்ட கத்துக்கிட்ட வித்தையை எல்லாம் சேர்த்துப் பண்ணினதுதான் ‘டகால்டி’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE