கடலூர் தியேட்டரில் ‘கருடன்’ படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பால் சர்ச்சை

By ந.முருகவேல்

கடலூர்: கடலூர் அருகே உள்ள ‘நியூ சினிமா’ திரையரங்களில் ‘கருடன்’ படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் ‘கருடன்’ படம் பார்க்க 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வந்தனர். அவர்களுக்கு கடலூர் ‘நியூ சினிமா’ திரையரங்கத்தினர் அனுமதி மறுத்துவிட்டனர். தொடர்ந்து எவ்வளவோ முறை கேட்டும் திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுத்து விட்டது.

இதனைத் தொடர்ந்து நரிக்குறவர்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர். காவலர்கள் அவர்களை கோட்டாட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் குடும்பத்துடன் காத்திருந்தனர். நரிக்குறவர்கள் திரையரங்கில் அனுமதிக்கப்படாத சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE