இது நாலு பொண்ணுங்களோட புரட்சிக் கூட்டணி! - கன்னித்தீவு இயக்குநர் சுந்தர் பாலு

By காமதேனு

நா.இரமேஷ்குமார்
rameshkumar.n@thehindutamil.co.in



தூரத்து ஒலிப்பெருக்கியில், ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்று தமிழிசை அக்கா ஆயிரத்து சொச்சமாவது தடவையாகச் சொல்லிக் கொண்டிருந்ததைத் தவிர்த்துவிட்டு பெரம்பூர் பின்னி மில்லுக்குள் நுழைந்தேன்.

கூட்டணி அரசியலும், மதிய வெய்யிலும் தமிழகத்தைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ‘கன்னித்தீவு’ படத்துக்காக நான்கைந்து அடியாட்களைப் போட்டு புரட்டி எடுத்துக்கொண்டிருந்தார் நடிகை வரலட்சுமி. கூடவே, எக்ஸ்ட்ரா என்டர்டெயின் மென்ட்டாக நடிகைகள் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்‌ஷா மூவரும் சண்டைபோடாமல், அருகருகே உட்கார்ந்து மானிட்டர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொத்த கன்னித்தீவுக்கும் ஒற்றை சிந்துபாத்தாக மாறி பளபள மேக்கப்பில் ‘ஆக்‌ஷன், கட்’ சொல்லிக் கொண்டிருந்த இயக்குநர் சுந்தர் பாலுவை ஓரங்கட்டினேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE