என் காதலுக்கு வீட்டில் பர்மிஷன் வாங்கிவிட்டேன்!- கண் சிமிட்டும் பிரியா பிரகாஷ் வாரியர்

By காமதேனு

நா.இரமேஷ்குமார்

ஓமர் லுலு இயக்கத்தில் மலையாளத்தில் உருவான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் ஒற்றைக் கண்ணசைவில் இந்திய இளைஞர்களின் மொத்த மனசையையும் அள்ளிக்கொண்ட நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சென்னை வந்திருந்தார். தி.நகர் பென்ஸ் பார்க் ஹோட்டலில் மூன்று மணி நிகழ்ச்சிக்கு மொத்த மீடியாக்களும் காத்திருக்க, மிக சரியாக ஐந்தே முக்கால் மணிக்கு கேரள தேவதை எனக்கு தரிசனம் கொடுத்தார். காத்திருப்பின் அயர்ச்சியைக் கண்களில் காட்டாமல் முதல் கேள்வியை வார்த்தைகளில் கொட்டினேன்...

 முதல் படமே இன்னும் ரிலீஸாகவில்லை. அதற்குள் இத்தனை பந்தா செய்கிறீர்களே..?

(சிரிக்கிறார்) நினைச்சேன்... ஹோட்டலுக்கு சரியான நேரத்துக்கு வந்துட்டும் இத்தனை லேட்டாப் போறோமேன்னு... ஆனா, என்னோட பிரச்சினை வேறு விதமானது. அதைத் தெரிஞ்சுக்கிட்டா இப்படி கோபப்பட மாட்டீங்க. ரொம்ப சாதாரணமா ஆரம்பிச்ச படம் ‘ஒரு அடார் லவ்’. அந்தப் படமும், கண்ணடிச்ச காட்சியும் இத்தனை பரபரப்பா பேசப்படும்னு எங்களுக்குத் தெரியாது. என்னை மாதிரி அறிமுக நடிகைக்கு முதல் படமே மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழிகளிலும் ரிலீஸாவது எத்தனை பெரிய ஆசிர்வாதம் தெரியுமா? பட நிகழ்ச்சிகளுக்கும், புரமோஷனுக்கும் நேற்று பெங்களூருவிலும், ஹைதராபாத்திலும் இருந்தேன். இன்று சென்னையில் பேசிக் கொண்டிருக்கிறேன். நாளை மாலை மும்பையில் நிகழ்ச்சி இருக்கு. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE