சினிமாவில் சின்னத்திரை நயன்தாரா!

By காமதேனு

நா.இரமேஷ்குமார்

‘சின்னத்திரை நயன்தாரா’ என டெலி சீரியல் ரசிகர்களால் கொண்டாடப்படும் வாணி போஜன், விதவிதமான போட்டோ ஷூட், கடைத் திறப்பு விழாக்கள் என பிஸியாக இருக்கிறார். ”என்னாச்சு... சிரீயலுக்கு அப்புறமா சினிமாவுல பிஸியா இருப்பீங்கன்னு பார்த்தோமே..?” என்று கேட்டால் சிரிக்கிறார்.

‘‘ஹலோ... இப்பவும் பிஸிதாங்க. விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் பிஸி. சீரியலுக்கே நான் பிளான் பண்ணி எல்லாம் நடிக்க வரலை. ஆங்கில இலக்கியம் படிச்சுட்டு ஆகாயத்துல விமானப் பணிப்பெண்ணா பறந்துட்டிருந்தேன். மாடலிங்ல இருந்த ஆர்வத்துல மாடலாகி, அப்படியே சின்னத்திரைக்குள்ள வந்தாச்சு” என்றவர் எனது கேள்விகளுக்கு இடம் வைக்காமல் தொடர்ந்து கடகடவெனப் பேசினார்.

‘‘சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்துட்டுத் தான் இருக்கு. வந்த வாய்ப்புகளை எல்லாம் தவற விடாம கமிட் பண்ணியிருந்தா இந்நேரம் பத்துப் படங்களாவது ரிலீஸாகியிருக்கும். ஆனா, மனசுக்குப் பிடிச்ச மாதிரியான படங்கள்னு எதுவுமே வரலை. தவிர, எனக்கு கிளாமர் சுத்தமா செட் ஆகாது. அதனாலயும் தவிர்த்து வந்தேன். இப்போ அனுபவங்கள் இருக்கு. நிறைய பேர் தெரிஞ்சவங்களா இருக்காங்க. நிறைய பேர் ஹீரோயினா வர்றாங்க. வர்ற வேகத்துலேயே ஒரு நாலஞ்சு படங்களோட காணாம போயிடறாங்க. நான் அப்படியிருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE