தலைக்கு தில்ல பார்த்தியா..?

By காமதேனு

வைகைப்புயல் வடிவேலு மகள் கலைவாணிக்கு கடந்த 19-ம் தேதி திருமணம். மகனுக்கு  மதுரை  ராஜாமுத்தையா  மன்றத்தில் கல்யாணம் நடத்தியவர்,  மகள் திருமணத்தை மதுரை பக்கம் தனது சொந்த ஊரான ஐராவதநல்லூரிலேயே நடத்திவிட்டார். மனதுக்குப் பிடித்தமானவர்களுக்கு மட்டுமே அழைப்பாம்! இது தெரியாமல் பத்திரிகையாளர்கள் சிலர் கேமராவும் கையுமாய் அங்கு போயிருக்கிறார்கள். அவர்களை வாசலிலேயே மடக்கிய வடிவேலு, “உங்கள யாரு வரச்சொன்னது... உங்கள எல்லாம் நான் கூப்பிடலயே..?” என்றாராம். பதிலுக்குப்  பத்திரிகையாளர்கள், “சரி, வந்தது வந்துட்டோம்... சூப்பரா ஒரு பேட்டி குடுங்கண்ணே” என்றார்களாம். அதற்கு,   “என்னாது... பேட்டியா... ஏன் வேட்டிய வேணா தாரேன்... உருவிட்டுப் போங்க; பேட்டியெல்லாம் கெடையாது” என்று சொல்லி, அவர்களை வெளியில் அனுப்பிவிட்டுத்தான்  உள்ளே போனாராம்.

தலைக்கு தில்ல பார்த்தியா..?

அமீர் இயக்கத்தில் ஆர்யா, சத்யா, அதிதி மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்தனத்தேவன்’ படம் என்னாச்சு? என்று கேட்டால், “வெவ்வேறு காலகட்டங்கள் கொண்ட கதை என்பதால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. எனவே, அதற்கு முன்பாக முற்றிலும் புதுமுகங்களை வைத்து சாலை சார்ந்த படமொன்றை இயக்க முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார் அமீர்.

படப் பிரச்சினைக்கு நடுவே அண்ணனுக்குக் கையாள பொதுப் பிரச்னையும் நிறைய இருக்கில்லே..!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE